×

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. 666 கோடி மதிப்பிலான 810 கிலோ தங்க நகைகளோடு வேன் அப்புறப்படுத்தப்பட்டது. தங்க நகைகளை எடுத்து வந்த வாகனத்தின் ஓட்டுநர் சசிகுமார், பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்து 2 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் பவானி அருகே 666 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Erode district ,Erode ,Samathuvapuram ,Salem-Coimbatore National Highway ,Dinakaran ,
× RELATED பவானி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி